Sunday, November 16, 2008

பிரிவு


எப்படியேனும் நிகழ்ந்து விடுகிறது...
ஒரு பூ உதிர்வது போல்..
ஒரு இலை காற்றில் மிதந்து அலைவது போல் ....
துக்கம் கவிழும் ஒரு மாலை வேளையில்
நம்மீது விருப்பமானவர்கள்
கையசைத்து விடை பெற்றுச் செல்வதும் ....!