Friday, August 15, 2008

நானும், என் கவிதையும் ...

நானும், என் கவிதையும் ...


உன் வருகைக்காகக் காத்திருந்த நேரங்களில்தான்
மிதந்து அலையும் வார்த்தைகளைக் கோர்க்கத் தொடங்கியிருந்தேன்
நமக்கானதொரு கவிதைக்காக ..

அந்த அங்கிள் தனியா பேசுறார் பாரும்மா
பயத்துடன் தாயின் கையை இறுகப் பற்றுகிறாள்
கடந்து போகும் ஒரு சிறுமி..

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகும்
ஏங்கிக் கொண்டிருக்கிறது முற்றுப்பெறாத கவிதை
இன்னும் சிக்காத ஒரு வார்த்தைக்காக..

புள்ளியாய் தொலைவில் தோன்றி
புன்னகையுடன் அருகில் அமர்கிறாய்

என் முகம் உரசும் உன் கூந்தலிலிருந்து
உதிரத் தொடங்குகிறது அந்த வார்த்தை

முழுமையடைகிறோம்
நானும், என் கவிதையும் ...
-ரமேஷ் K

1 comment:

முத்துகிருஷ்ணன் said...

I saw this poem after hearing from alagu. I enjoyed that poem very well. The narration was very good.
keep it up